Friday, April 19, 2024

இளையராஜா கதை - இம்தியாஸ் அலி இயக்கத்தில் , ஏ.ஆர் இரகுமான் இசையில்

 இளையராஜா படத்தை இயக்க நான் இம்தியாஸ் அலியை பரிந்துரைக்கிறேன். இசை ஏ.ஆர்.இரகுமானாக இருக்க வேண்டும்.

இன்று சம்கீலா படம் பார்த்தேன். படம் பார்த்தபின் இதனை சொல்லத் தோன்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய கதை இது. அவனுடைய வாழ்வை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்துகிறது.

தன் மண்ணின் மைந்தனை, ஏன் ஒரு சமூகம் உச்சி முகர்கிறது என்பதையும், அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் அவனை நிராகரிக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் விவரிக்கிறது. அவனுடைய ஏற்றத்தை எட்டி நின்று பார்க்கும் இன்னொரு சமூகம் அவன் தடுமாறும்போது அவனை எப்படி தங்கள் சொல் கேட்பவனாக மாற்ற வலை வீசுகிறது என்பதையும் படம் தொட்டுக் காண்பிக்கிறது.

சம்கீலாவின் நிஜப் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நிஜ காட்சிகளுடன், திரைக்காட்சிகளை இணைத்து காட்டிய விதம் அற்புதம்.

ஏ.ஆர்.இரகுமான் சம்கீலா பற்றி


ய பாடலையும், அவனுடைய வாழ்வின் முக்கிய தருணங்களுக்கான பாடல்களையும் இப்படத்தில் இசைத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

இந்த மண்ணின் ஈரத்தை சுவாசித்துக் கொண்டும், இந்த மண்ணுக்கான ஈரத்தை தந்து கொண்டும் இருக்கும் இளையராஜாவின் வாழ்வை, அவரைச் சுற்றியுள்ள சமூக அரசியலுடன் பார்ப்பதற்கு, ஆழமான பார்வையுள்ள ஒரு எழுத்து தேவை. அந்த எழுத்தும், அதை திரைக்கு கடத்தும் திறனும் இம்தியாஸ் அலியிடம் இருக்கிறது. ராக்ஸ்டார் உள்ளிட்ட அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி!


இளையராஜாவின் கதையை எத்தனையோ விதங்களில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவருடைய வாழ்வு பெரு வாழ்வு. அவ்வாழ்வின் ஒரு துளியை அருண்மாதேஸ்வரன் முதல் கதையாக இயக்கட்டும், அடுத்த இளையராஜா கதையை இம்தியாஸ் அலி, ஏ.ஆர் இரகுமான் இசையில் இயக்கட்டும். இது என் விருப்பம்.

ISR Selvakumar

Wednesday, April 17, 2024

கருத்துக்கணிப்பு : தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கையில்லை


தேர்தல் ஆணையத்துக்கும் சேர்த்து ஒரு பட்டனை வாக்கு இயந்திரத்தில் வையுங்கள்!

இந்தத் தேர்தலில் நாம் நிஜமாகவே உற்று நோக்கக் கூடிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கை இல்லை என 58% சதவிகிதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அதாவது வாக்களிக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சந்தேகிக்கும் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம்தான், இந்தத் தேர்தலை நடத்துகிறது. இது நிஜமாகவே கவலைக்குரியது.
பொதுமக்கள் தங்களுக்கு நம்பிக்கை தராத கட்சியை மட்டுமல்ல, நம்பிக்கையை இழந்துள்ள தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து வெல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளோம்.
(This image is #Ai generated)

கூடுதலாக 12 நாட்கள் எடுத்துக் கொண்டு வாக்குகளை எண்ணிச் சொல்லலாமே!


வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாள் ஆகுமே என்கிறார்கள். அதற்கும் மேல் கூட ஆகட்டுமே! தேர்தலை நடத்த 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் தேர்தல் ஆணையம் கூடுதலாக 12 நாட்களை எடுத்துக்கொண்டு எண்ணிச் சொல்லலாமே!

தற்போதைய Ver.3 வாக்கு இயந்திரங்கள் சந்தேகத்துக்கு உரியவை. ரிசல்டுகளை மாற்ற முடியும் என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. எனவே இயந்திரங்கள் தரும் எண்ணிக்கையையும், விவிபேட் பிரிண்ட் செய்யும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றுதானா என்பது ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் நியாயமானது.